யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றுக்கு உள்ளான வயோதிபப் பெண் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்பாய் கொரோனா தடுப்பு மையத்தில் கடந்த இரவு அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களத்தின் பெயர் குறிப்பிடவிரும்பாத உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,
குறித்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனைத் தொடர்புகொண்டு கேட்ட போது,
குறித்த பெண் தற்போதும் கோப்பாய் கொரோனா தடுப்பு வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, யாழ்ப்பாணம்